சியமந்தக மணி
என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி:
"விநாயக சதுர்த்தி விருதம் இருப்பவர்கள் சந்திர தரிசனம் செய்யக்கூடாது கூடாது, அப்படி சந்திரனைப் பார்த்தால் துன்பம் தொடரும் என்கின்றனர், இஇது எவ்வளவு தூரம் உண்மை?"
என்னுடைய பதில்:
கேள்வியில் ஒன்றும் தவறேயில்லை.
வளர்பிறைச் சதுர்த்தியின் பிறையைப்பார்க்கக்கூடாது என்று ஐதிகம்.
பார்த்தால் ஏதாவது வீண் அபவாதம் ஏற்படும் என்பார்கள்.
பெரிய மஹாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் அதற்கு விளக்கம் கொடுக்கும்வண்ணம் ஒரு கதை காணப்படும். 'சியமந்தக மணி கதை' என்பார்கள்
கிருஷ்ணர் அதனைப் பார்த்ததால் சியமந்தகமணி சம்பந்தமாக வீண் அபவாதத்துக்கு ஆளாக நேரிட்டது என்று சொல்வார்கள்.
சியமந்தக மணி என்பது சுபிட்சத்தைக்கொடுக்கும் ஒரு மணி.
மணி என்றதும் ஏதோ bell சமாசாரமாக்கும் என்று எண்ணிவிடத் தோன்றும்.
அப்படியெல்லாம் இல்லை. அது ஒரு crystal போன்றது.
அந்த மணியை சத்ராஜித் என்னும் யாதவகுல மன்னன் சூரியனிடமிருந்து பெற்றான். அவன்தான் பாமாவின் தந்தை. கிருஷ்ணருடைய இரண்டாவது மனைவி பாமா எனப்படும் சத்திய பாமா.
அவனிடம் சியமந்தக மணி இருப்பதைக் கண்ட கிருஷ்ணர் அதனை மிகவும் வியந்து பாராட்டி விசாரித்தார்.
கிருஷ்ணருக்கு சியமந்தகமணிமேல் ஆசையேற்பட்டதால் இப்படிக் கேட்கிறாரோ என்று அவன் நினைத்துவிட்டான். அவன் நிம்மதியை இழந்துவிட்டான். மணியை வைத்திருக்கவும் ஆசை;
வைத்திருக்க அச்சமும் ஏற்பட்டுவிட்டது.
ஆகவே அந்த மணியைத் தன் தம்பியாகிய பிரசேனனிடம் கொடுத்துவிட்டான். அவன் தன்னுடைய கழுத்தில் அதனைத் தொங்கவிட்டுக்கொண்டான்.
ஒருமுறை அவனும் கிருஷ்ணரும் காட்டுக்கு வேட்டையாடச் சென்றிருந்தபோது ஒரு சிங்கம் அவனைக் கொன்றுவிட்டு, அந்த சியமந்தக மணியை எடுத்துச்சென்றுவிட்டது .
பிரசேனனைக் கிருஷ்ணர் தேடினார். இருட்டிக்கொண்டிருந்தது.
அப்§
பாது அவர் ஆகாயத்தைப் பார்த்தார். அங்கே நாலாம்பிறை தெரிந்தது. அதனை அவர்
பார்த்துவிட்டார்.
பின்னர் அவருடைய நகரமாகிய துவாரகைக்குத் திரும்பினார்.
பிரசேனன் திரும்பி வராததை அறிந்த சத்ராஜித் கிருஷ்ணர் பேரில் சந்தேகம் கொண்டான்.
பிரசேனனைக் கிருஷ்ணர்தான் கொன்றுவிட்டு சியமந்தக மணியை அபகரித்துக்கொண்டுவிட்டார் என்று சத்ராஜித் குற்றம்சாட்டினான். இதனை அனைவருமே நம்பினார்கள்.
கிருஷ்ணருக்கு வீண் அபவாதமும் பழியும் ஏற்பட்டன.
ஆகவே தாம் நிரபராதி என்பதை நிரூபிக்கவேண்டி, கிருஷ்ணர் அந்த மணியைத் தேடிச் சென்றார்.
அந்தக் காட்டுக்குத் திரும்பிச்சென்றார்.
அந்தக் காட்டில் ஒரு குகையில் கரடிகளுக்கெல்லாம் ராஜாவாகிய ஜாம்பவான் இருந்தார். அவர் பிரம்மாவின் அம்சமாக கிரேதாயுகத்தில் பிறந்தவர். இராம ராவண யுத்தத்திற்காக அவதரித்தவர்.
இராமருடன் நெருங்கிப் பழகியவர்.
அவர் ஒரு சிரஞ்சீவி. இறப்பில்லாதவர். அவர் அந்த சிங்கத்தைக் கொன்றுவிட்டு சியமந்தக மணியை எடுத்துச் சென்று தன்னுடய குழந்தையிடம் கொடுத்தார்.
காட்டில் சிங்கம் பிரசேனனைக் கொன்ற தடத்தைக் கிருஷ்ணர் பார்த்து விட்டார். பக்கத்தில் பெருங்கரடியின் பாதச்சுவடு தெரிந்தது. தொடர்ந்து தேடிச் செல்கையில் ஜாம்பவானின் குகைக்கு வந்துவிட்டார்.
அவர் உள்ளே சென்று பார்க்கும்போது ஜம்பவானின் மகள் தன்னுடைய தம்பியைத் தாலாட்டிக் கொண்டிருந்தாள்.
அவள் ஒரு பேரழகி. அவளுக்கு நுண்ணுணர்வு உண்டு. அதன்மூலம் கிருஷணர் அங்கு வந்திருப்பதை அறிந்துகொண்டாள்.
எதற்காக வந்திருக்கிறார் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது.
பிள்ளையைத் தாலாட்டுவதற்காக ஒரு சுலோகத்தை ராகம் போட்டுச் சொன்னாள்.
ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத:
ஸ¤குமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:
"சிங்கம் பிரசேனனைக் கொன்றுவிட்டது.
சிங்கமோ ஜாம்பவானால் கொல்லப்பட்டுவிட்டது.
நல்ல குழந்தையே! அழாதே. ஸ்யமந்தக மணி உனக்குத்தான்,"
இவ்வாறு அவள் குறிப்பாகக் கிருஷ்ணருக்கு அறிவித்தாள்.
அதன்மூலம் கிருஷ்ணருக்கு சியமந்தகமணி இருக்குமிடம் தெரிந்துவிட்டது.
அதனைப் பெறுவதற்காக ஜாம்பவானுடன் போரிட்டார்.
மல்யுத்தம்தான். இருவரும் கட்டிப் புரண்ட போதெல்லாம் ஜாம்பவானுக்கு ஏதோ ஒரு பழைய ஞாபகம் வந்தது. அந்த ஆலிங்கனம் என்னும் கட்டிப்பிடிப்பு எங்கோ எப்போதோ பரிச்சயமானதுபோல் தோன்றியது..
யோசிக்கும்போது அது இராமர் தம்மைத் தழுவிக் கொண்டபோது ஏற்பட்ட அதே உணர்ச்சியாகத் தோன்றியது. அப்போது அவர் போரை நிறுத்திவிட்டு உற்றுப் பார்க்கும்போது கிருஷ்ணர் இராமராக அவர் கண்களுக்குத் தோற்றமளித்தார்.
யுகத்தையும் தாண்டி அவதாரத்தையும் தாண்டி நின்ற நுண்ணுணர்வே வென்றது.
தம் தலைவனை மீண்டும் கண்டுகொண்டார் ஜாம்பவான்.
கிருஷ்ணரிடம் சியமந்தமணியையும் தந்து அவருக்குத் தம்முடைய மகளாகிய ஜாம்பவதியையும் திருமணம் செய்துகொடுத்து அனுப்பிவைத்தார்.
சியமந்தகமணியைக் கிருஷ்ணர் சத்ராஜித்திடம் திருப்பிக் கொடுத்தார்.
அவனுக்குக் குற்ற உணர்வும் மனசாட்சியும் உறுத்தின.
நிரபராதியான கிருஷ்ணரை அபவாதத்துக்கு ஆளாக்கியதுதான் காரணம்.
அதற்குப் பிராயச்சித்தமாகத் தன்னுடைய மகள் பாமாவைக் கிருஷ்ணருக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டான்.
ஆனால் பாமாவைத் திருமணம் செய்துகொள்ள ஏற்கனவே மூன்று பேர் முயன்றுகொண்டிருந்தனர்.
அவர்கள் ஆத்திரம்கொண்டனர்.
கிருஷ்ணர் ஹஸ்தினாபுரத்துக்குச் சென்றிருந்த சமயமாகப் பார்த்து அவர்களில் ஒருவனாகிய சததன்வா சத்ராஜித்தைக் கொன்றுவிட்டு சியமந்தக மணியையும் கைப்பற்றிக்கொண்டான்.
கிருஷ்ணர் திரும்பியபின்னர் சததன்வா பயந்துபோய் துவாரகையைவிட்டு ஓடிவிட்டான். அவன் ஓடும்போது போட்டியாளர்கள் மூவருள் ஒருவரான அக்ரூரர் என்பவரிடத்தில் மணியைக் கொடுத்துவிட்டு ஓடினான். கிருஷ்ணர் தம் அண்ணன் பலராமருடன் அவனை விரட்டிச் சென்று கொன்றுவிட்டார்.
ஆனால் அவனிடம் சியமந்தக மணி இல்லை.
வெறுங்கையோடு பலராமரிடம் திரும்பினார். ஆனால் கிருஷ்ணர்தான் சியமந்தகமணியை எங்கோ மறைத்துவைத்துக்கொண்டு பொய்சொல்வதாக பலராமர் நம்பி, கிருஷ்ணரைக் குற்றம் சாட்டினார்.
அக்ரூரரோ காசிக்குச் சென்றுவிட்டார்.
சியமந்தக மணியால் ஏற்பட்ட துயரங்களையெல்லாம் நினைத்து நினைத்து கிருஷ்ணர் மனவருத்தப் பட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது வந்த நாரதரிடம் சொன்னபோது, அவர் நாலாம்பிறையைப் பார்த்ததால் வந்த வினை என்று சொன்னார்.
அதனை அறிந்த கிருஷ்ணர் விநாயகருக்காகச் சதுர்த்தி பூஜையைச் செய்தார். விநாயகர் வந்து அவருடைய அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார்.
விரைவிலேயே துவாரகையில் பஞ்சம் ஏற்பட்டது.
ஆனால் அந்தச் சமயத்தில் அக்ரூரரின் வீட்டில் மட்டும் சுபிட்சமாக இருந்தது. சியமந்தகமணி எங்கே இருக்கிறதோ அங்கு சுபிட்சம் இருக்குமல்லவா? அதுவே தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டது.
ஆகவே கிருஷ்ணர் அக்ரூரரைக் காசியிலிருந்து தயவாகவும் நயமாகவும் செய்திசொல்லி அனுப்பி வரவழைத்தார். திரும்பிவந்த அக்ரூரர் மணியைக் கிருஷ்ணரிடம் கொடுக்கமுயன்றும் கிருஷ்ணர் அதனை அக்ரூரரே வைத்துக்கொள்ளுமாறு செய்துவிட்டார்.
கிருஷ்ணரின்மீதிருந்த அபவாதம் முற்றாக நீங்கிற்று.
எந்த நாலாம்பிறையை ஏன் பார்க்கக்கூடாது, எதனைப் பார்த்துப் பூஜை செய்யவேண்டும் என்ற விபரம் பின்பு......
அமாவாசைக்கு அடுத்து வரும் நாலாம் பிறையைப் பார்க்கக்கூடாது என்ற சாபத்தை சந்திரனுக்கு விநாயகர் கொடுத்தார்.
சந்திரனுக்குத் தன்னுடைய அழகைக்கொண்டு கர்வம்.
ஒருமுறை விநாயகர் தம் எலி ஊர்தியில் வருவதைக்கண்டு கேலியாகச் சிரித்ததால் 'சந்திரனைப் பார்த்தவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படட்டும்' என்று விநாயகர் சாபமிட்டார்.
இதனால் மனம் வருந்திய சந்திரன் கடலுக்குள்போய் ஒளிந்து கொண்டு விட்டான். அதனால் ஏற்பட்ட கஷ்டங்களைக் கண்ட தேவர்கள் ரிஷிகள் அனைவருமாக விநாயகரின் கோபம் தணிவதற்கு விரதமிருந்து பூஜை செய்துவிட்டு, சந்திரனைக் கண்டு விநாயகரிடம் மன்னிப்புக் கோரச்
சொன்னார்கள்.
அதன்படியே சந்திரனும் விக்னேஸ்வரைப் பூசித்தான்.
மனம் குளிர்ந்த விநாயகர் தம்முடைய சாபத்தின் அளவைக் குறைத்து ஒரு மாதத்தில் ஒருநாள்மட்டுமே- வளர்பிறைச் சதுர்த்தியின் பிறையைப் பார்க்கக்கூடாது என்று ஏற்படுதினார்.
அத்துடன் சந்திரனைத் தன் முடியிலும் சூட்டிக்கொண்டார். நெற்றியிலும் வைத்துக்கொண்டார்.
'பாலச்சந்திரன்' என்ற பெயரும் இதனால் விநாயகருக்கு ஏற்பட்டது. பாலத்தில் - நெற்றியில் சந்திரனை அணிந்தவன் என்று பொருள்.
இதுமட்டுமின்றி இன்னொரு வரத்தையும் பெருமையையும் சந்திரனுக்கு விநாயகர் தந்தார்.
'பௌர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறையின் நாலாம்நாள் - சதுர்த்தியன்று தமக்காக விரதமிருந்து பூசை செய்துவிட்டு, இரவில் நாலாம்பிறைச் சந்திரன் உதிக்கும்போது, சந்திரதரிசனம் செய்துவிட்டு, சந்திரனையும் பூசித்துவிட்டு, விரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும்' என்று ஏற்படுத்தினார்.
அந்த விரதம் சங்கடங்கள் நீங்குவதற்காக அனுஷ்டிப்பது. சங்கடங்களை நீக்குபவர் சங்கடஹர கணபதி.
அவருக்காக ஏற்பட்ட விரதத்தை அன்று அனுஷ்டிப்பதால் அந்த நாளுக்கு 'சங்கடஹர சதுர்த்தி' என்று பெயர் ஏற்பட்டது.
சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டைப் பற்றி ஏற்கனவே எழுதி வலைத்தளத்தில் போட்டு வைத்திருக்கிறோம்.
வீண் அபவாதம் நீங்குவதற்காகச் செய்யவேண்டிய பிராயச்சித்தமாக சியமந்தக மணி கதையைப் படிப்பார்கள்; அல்லது படிக்கச் சொல்லிக் கேட்பார்கள்.
அதனிலும் எளிதாக ஒரு வழியையும் சொல்லியிருக்கிறார்கள்.
அந்தக் கதையில் கிருஷ்ணருக்கு ஜாம்பவதி குறிப்பாக உணர்த்திய தாலாட்டுப் பாடலை ஜபமாகச் சொல்லச் சொல்லியிருக்கிறார்கள்.
ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத:
ஸ¤குமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:
விநாயகரை விக்னநாசனனாக வழிபடுவதற்கென்று தனிப்பட்ட மந்திரங்கள் இருக்கின்றன.
'விக்னேஸ்வ சோடச நாமம்' என்று பெயர் பெற்றவை.
சங்கடங்களை நீக்குவதற்கென்று சங்கடஹர கணபதி.
அதுபோலவே விக்னங்களை நிக்குவதற்கு விக்னநாசனன் அல்லது விக்னஹரன்.
விக்னநாசன கணபதி சோடச நாமங்களைத் தனித்தனியாகவும் சொல்லலாம். பதினாறையும் ஒரே மந்திர சுலோக தோத்திரமாகவும் சொல்லலாம்.
ஸ¤முகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்ய§க்ஷ¡ பாலச்சந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:
இதனையே நாமாவளியாக:
ஸ¤முகாய நம:
ஏகதந்தாய நம:
கபிலாய நம:
கஜகர்ணகாய நம
லம்போதரய நம
விகடாய நம
விக்நராஜாய நம
விநாயகாய நம
தூமகேதவே நம
கணாத்யக்ஷ¡ய நம
பாலச்சந்த்ராய நம
கஜானனாய நம
வக்ரதுண்டாய நம
சூர்ப்பகர்ணாய நம
ஹேரம்பாய நம
ஸ்கந்தபூர்வஜாய நம
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$